ஆன்மிகம்
சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண விழா

பரமத்திவேலூரில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண விழா

Published On 2021-11-23 04:38 GMT   |   Update On 2021-11-23 04:38 GMT
திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
பரமத்திவேலூரில் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி மன்றம் சார்பில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ விழா மாணிக்கவாசகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவையொட்டி சக்தி விநாயகர் வழிபாடு, கொடியேற்றம், பசு தாயார் வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூர் திருக்கல்யாண குழுவினர் மற்றும் மாணிக்கவாசகர் சிவனடியார்கள் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News