ஆன்மிகம்
நந்தி அபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

Published On 2021-05-25 04:07 GMT   |   Update On 2021-05-25 04:07 GMT
மயிலாடுதுறை திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் காசிக்கு இணையான 5 கோவில்களில் முதன்மையான கோவிலாக விளங்குகிறது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டி சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் கலந்து கொள்ளவில்லை.

கோவில் நிர்வாக அதிகாரி முருகன், பேஸ்கர் திருஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News