உள்ளூர் செய்திகள்
தீர்த்தகிரி.

அரூர் அருகே விபத்து: சுற்றுலா வாகனம் மோதி ஊர்க்காவல் படை வீரர் சாவு

Published On 2022-04-17 07:28 GMT   |   Update On 2022-04-17 07:28 GMT
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சுற்றுலா வாகனம் மோதி ஊர்க்காவல் படை வீரர் பலியானார்.
தருமபுரி,

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள பெத்தூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு மகன் தீர்த்தகிரி. இவர் கடந்த 2014 &ம் ஆண்டு முதல் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார்

இந்த நிலையில் அரூர் அருகே உள்ள சோரியம்பட்டி கிராமத்தில் நடக்கும் பேராட்சி அம்மன்  கோவில் திருவிழாவுக்கு அவரது உறவினர்களை அழைத்துக் கொண்டு  கிராமத்தில் உள்ள வீட்டில் விட்டார். பின்னர் தனது சொந்த கிராமத்திற்கு  மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
விபத்தில் பலி
அப்போது சென்று கொண் டிருக்கும்போது  அரூர் தருமபுரி நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தருமபுரியில் இருந்து அரூர் நோக்கி வந்துகொண்டிருந்த சுற்றுலா வாகனம்  மோதியது. இதில் தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அரூர் போலீசார்  விரைந்து வந்து பலியான ஊர்க்காவல் படை வீரர் தீர்த்தகிரி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத் தனர். 

இந்த விபத்து குறித்து அரூர்  இன்ஸ்பெக்டர் லட்சு மணதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் ஊர்க்காவல் படை வீரர் பலியான சம்ப வம் அரூர் பகுதியில் சோகத் தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பலியான தீர்த்த கிரிக்கு மனைவியும் , ஒரு ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
Tags:    

Similar News