செய்திகள்
வாணியம்பாடியில் காரில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் காரில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:
பெங்களூரிலிருந்து சென்னைக்கு உறவினர் திருமணத்திற்காக கோவிந்தப்பா- லட்சுமி தம்பதியினர் அவர்களது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று நிறுத்தி உள்ளனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், லட்சுமி (வயது 50) என்பவர் கழுத்திலிருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து லட்சுமி வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு உறவினர் திருமணத்திற்காக கோவிந்தப்பா- லட்சுமி தம்பதியினர் அவர்களது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி செட்டியப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று நிறுத்தி உள்ளனர்.
அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், லட்சுமி (வயது 50) என்பவர் கழுத்திலிருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து லட்சுமி வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.