ஆட்டோமொபைல்
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ்

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-08-18 10:29 GMT   |   Update On 2020-08-18 10:29 GMT
வால்வோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

வால்வோ நிறுவனம் தனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலினை இந்தியாவில் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் காரணமாக வால்வோ தனது கம்பஷன் என்ஜின் மாடல்களை படிப்படியாக குறைக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் எஸ்யுவி இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.



முற்றிலும் எலெக்ட்ரிக் மாடலான எக்ஸ்சி40 சர்வதேச சந்தையில் அமோக வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த மாடல் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வால்வோ மேலும் அதிக வாகனங்களில் எலெக்ட்ரிக் திறன் வழங்கும் முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு வால்வோ நிறுவனம் இந்தியாவில் நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை அடுத்த மூன்று ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது. 

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எஸ்யுவி மாடலில் இரண்டு 150 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 78 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பவர்டிரெயின் 402 பிஹெச்பி பவர், 659 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News