உள்ளூர் செய்திகள்
ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-01-13 10:20 GMT   |   Update On 2022-01-13 10:20 GMT
கோவில்பட்டியில் மேற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி மேற்கு ஒன்றிய ம.தி.மு.க. சார்பாக ஆலோசனை கூட்டம் மணியாச்சி பைபாஸ் சாலையில் ஒரு மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி செயலாளர் சீனிவாசன் வரவேற்றார்.

மாநில மீனவர் அணி செயலாளர் நக்கீரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பயிர் காப்பீடு தொகை, நிவாரண தொகை மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து பணபலன்களையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணிகளை தடையில்லாமல் மேற்கொள்ள வசதியாக, அவர்களுக்கு உரம், விதைகள், மற்றும் இடுபொருட்கள், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News