செய்திகள்
விரக்தியில் உள்ளார் பொன் ராதாகிருஷ்ணன்- அமைச்சர் கடம்பூர் ராஜூ
பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் பொன் ராதாகிருஷ்ணன் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கோவில்பட்டி:
கூட்டணி தொடர்பாக பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பாஜகவும், தொகுதி மக்களும் தன்னை ஒதுக்கிவிட்டதாக விரக்தியில் உள்ளார் முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். தமிழக அரசின் செயல்பாடுகளை மாநில பாஜக தலைவர் எல் முருகன் பாராட்டியுள்ளார்.
அதிகாரத்தில் இருந்த போது திமுகவினர் எதையும் செய்யாமல் தற்போது அரசியலுக்காக பேசுகின்றனர் என கூறினார்.