உள்ளூர் செய்திகள்
வாலாஜாவில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
வேலூர் மாவட்டம் வாலாஜாவில் கஞ்சா விற்றது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:
வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அணைக்கட்டு ரோட்டில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் வாலாஜா கீழ் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆலி (எ) ஆனந்த் (வயது 36) என தெரியவந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தை கைது செய்தனர்.
வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அணைக்கட்டு ரோட்டில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் வாலாஜா கீழ் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆலி (எ) ஆனந்த் (வயது 36) என தெரியவந்தது.
இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தை கைது செய்தனர்.