செய்திகள்
டி.என்.பாளையம் அருகே கோவில் சிலைகளை தூக்கி வீசியவர் கைது
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே கோவில் சிலைகளை தூக்கி வீசியவரை போலீசார் கைது செய்து மாவட்ட கிளை ஜெயலில் அடைக்கப்பட்டார்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்குள் நள்ளிரவு நேரத்தில் கள்ளியங்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் சம்பத்குமார் (40) உள்பட 3 பேர் நுழைந்தனர்.
அங்கு அவர்கள் மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு அங்கிருந்த 2 சிலைகளை சம்பத்குமார் பெயர்த்து அருகே உள்ள வயல்வெளியில் வீசிவிட்டு சென்றார். மறுநாள் தனது வண்டியை எடுக்க சம்பத்குமார் வந்த போது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு பொதுமக்கள் அவரை பங்களாபுதூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மாவட்ட கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்குள் நள்ளிரவு நேரத்தில் கள்ளியங்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் சம்பத்குமார் (40) உள்பட 3 பேர் நுழைந்தனர்.
அங்கு அவர்கள் மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு அங்கிருந்த 2 சிலைகளை சம்பத்குமார் பெயர்த்து அருகே உள்ள வயல்வெளியில் வீசிவிட்டு சென்றார். மறுநாள் தனது வண்டியை எடுக்க சம்பத்குமார் வந்த போது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு பொதுமக்கள் அவரை பங்களாபுதூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மாவட்ட கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.