செய்திகள்
விபத்து பலி

விராலிமலை அருகே கார் மோதி மூதாட்டி பலி

Published On 2020-11-22 05:38 GMT   |   Update On 2020-11-22 05:38 GMT
விராலிமலை அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:

விராலிமலை தாலுகா முல்லையூர் வல்லக்கோன்பட்டியைச் சேர்ந்தவர் பெத்தையா. இவரது மனைவி திம்மாயி (வயது 70). இவர் நேற்று விராலிமலைக்கு வந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக விராலிமலை அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குற்ச்சிப்பட்டி பிரிவு சாலையை கடக்க முயன்றார். அப்போது மார்த்தாண்டத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து புகாரின் பேரில் விராலிமலை போலீசார் காரை ஓட்டி வந்த சென்னை ராஜகீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மனைவி சுப்புலெட்சுமி (45) மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News