செய்திகள்
மகாத்மா காந்தி, சாஸ்திரி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி

மகாத்மா காந்தி, சாஸ்திரி பிறந்த நாள்- நினைவிடங்களில் மரியாதை செலுத்திய ஜனாதிபதி

Published On 2020-10-02 04:22 GMT   |   Update On 2020-10-02 04:22 GMT
மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடங்களில் ஜனாதிபதி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
புதுடெல்லி:

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதேபோல் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி டெல்லி  ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடம் மற்றும் விஜய் காட்டில் உள்ள சாஸ்திரி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், டெல்லி முல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். 

காந்தியடிகள் மற்றும் சாஸ்திரியை நினைவுகூர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வாய்மை, அகிம்சை மற்றும் அன்பு பற்றிய மகாத்மா காந்தியன் கொள்கை சமூகத்தில் நல்லிணக்கத்தை உண்டாக்குவதுடன, உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது. அவர் மனித குலத்திற்கு உத்வேகம் அளிக்கும் தலைவர்’ என புகழாரம் சூட்டி உள்ளார்.

சாஸ்திரி நினைவிடத்தில் அவரது மகன்கள் சுனில் சாஸ்திரி, அனில் சாஸ்திரி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 
Tags:    

Similar News