செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு வளமான வாழ்வை தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்- முதலமைச்சர் வாழ்த்து

Published On 2020-12-31 04:46 GMT   |   Update On 2020-12-31 04:46 GMT
தமிழக மக்களுக்கு வளமான வாழ்வை தொடர்ந்து வழங்கும் ஆண்டாக ஆங்கில புத்தாண்டு மலரட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

* அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

* தமிழக மக்களுக்கு வளமான வாழ்வையும் நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

* வளம், வலிமை மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச்செய்திட ஒற்றுமையுடன் உழைத்திடுவோம்.

இவ்வாறு அவர்  கூறி உள்ளார்.
Tags:    

Similar News