ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் இன்று வருடாந்திர தெப்பல் உற்சவம் பக்தர்கள் இன்றி நடக்கிறது

Published On 2021-03-24 09:03 GMT   |   Update On 2021-03-24 09:03 GMT
திருப்பதியில் வருடாந்திர தெப்பல் உற்சவம் இன்று தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஏகாதசி அன்று தொடங்க கூடிய வருடாந்திர தெப்பல் உற்சவம் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடத்தப்படும்.

அதன்படி வருடாந்திர தெப்பல் உற்சவம் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று சீதா லட்சுமணர், ஆஞ்சநேயர் ராமருடன் 3 சுற்றுகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர்.

2-வது நாளான நாளை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் சாமி 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

கடைசி 3 நாட்களான 26, 27, 28-ந்தேதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். 3-வது நாள் 3 சுற்றுகளும், 4-வது நாள் 4 சுற்றுகளும், 5-வது நாள் 7 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.

வருடாந்திர தெப்பல் உற்சவத்தையொட்டி, இன்று மற்றும் நாளை ஆன்லைனில் நடைபெற சகஸ்கர தீப அலங்கார சேவையும், 18, 19, 20-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பல் உற்சவம் நடக்கிறது.
Tags:    

Similar News