ஆட்டோமொபைல்
விரைவில் இந்தியா வரும் போர்டு மஸ்டாங் மேக் இ எலெக்ட்ரிக் எஸ்.யு.வி.
போர்டு நிறுவனத்தின் மஸ்டாங் மேக் இ எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
போர்டு இந்தியா நிறுவனம் தனது மஸ்டாங் மேக் இ எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிவித்து உள்ளது. முன்னதாக போர்டு நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்கள் உற்பத்தி நிறுத்தப்படும் என அறிவித்தது.
மஸ்டாங் கூப் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மஸ்டாங் மேக் இ 68 கிலோவாட் ஹவர் மற்றும் 88 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் அமெரிக்க சந்தையில் நான்கு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக போர்டு இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துகிறது. இந்த நிலையில், போர்டு தனது விலை உயர்ந்த மஸ்டாங் மேக் இ மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறது.