செய்திகள்
வேன் கவிழ்ந்து விபத்து

நாங்குநேரி அருகே விபத்து - வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி

Published On 2019-11-30 08:04 GMT   |   Update On 2019-11-30 08:04 GMT
நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணம் செய்த இறச்சக்குளத்தை சேர்ந்த மூதாட்டி பலியானார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
களக்காடு:

குமரி மாவட்டம் இறச்சக்குளத்தில் இருந்து இன்று அதிகாலையில் சிலர் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

வேனை இறச்சக்குளத்தை சேர்ந்த ஜார்ஜ் மகன் பிரபு (வயது 23) ஓட்டினார். வேன் நாங்குநேரி அருகே உள்ள இறைப்புவாரியில் சென்றபோது திடீரென வேன் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக ரோட்டின் தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த இறச்சக்குளத்தை சேர்ந்த மூதாட்டி பாக்கியம் (80) பலியானார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த நாங்குநேரி போலீசார் மற்றும் அக்கம், பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News