உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு சான்றிதழ் வழங்கி பாராட

குறும்பட போட்டியில் அரியலூர் போலீசாருக்கு பரிசு

Published On 2022-01-11 09:17 GMT   |   Update On 2022-01-11 09:17 GMT
போதை விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான குறும்பட போட்டியில் அரியலூர் போலீசார் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

அரியலூர்:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட போலீசார் போதை தடுப்பு விழிப்புணர்வு குறித்து குறும்படம் தயாரித்து வழங்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி அனைத்து மாவட்ட போலீசாரும் போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான குறும்படங்களை நடித்து தயாரித்து போட்டியில் கலந்து கொண்டனர்.

கடந்த வாரம் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு முன்னிலையில் குறும்படங்கள் திரையிடப்பட்டன. அதில் அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட போலீஸ்       சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட இணைய குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் நடித்த குறும்படம் தயாரிக்கப்பட்டது.

இதில் சிறப்பாக எதார்த்தமான கிராம மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கிரா மத்து பாணியில் எளிய முறையில் நிஜ போலீசாரை கொண்டு சிறப்பாக  நடித்து வழங்கப்பட்டது.

இந்த குறும்படம் மாநில அளவில் இரண்டாம் பரிசை தட்டிச்சென்றது. நடிகர் ஜெயம் ரவி காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் நடித்து கொடுத்த குறும்படம் முதல்  பரிசை தட்டிச் சென்றது.

இதனை தமிழக காவல் துறை உயரதிகாரிகளும், அரியலூமாவட்ட பொதுமக்களும்  மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணியை பாராட்டி வருகின்றனர்.   

இந்தநிலையில் சிறப்பாக நடித்து 2 ஆம் பரிசை பெற்ற போலீசார் மற்றும் படத்தின் குழுவினருக்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா        சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Tags:    

Similar News