செய்திகள்
முக ஸ்டாலின்

வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2021-07-24 09:16 GMT   |   Update On 2021-07-24 15:15 GMT
முதல் நாளிலேயே இந்தியா பிரகாசமான ஆரம்பத்தை தொடங்கி உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
சென்னை:

பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.  டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை  மீராபாய் சானு வென்று உள்ளார்.

49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.

வெள்ளிபதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் வெள்ளி பதக்கத்தை பெற்று தந்ததற்கு வாழ்த்துகள் என்றும், முதல் நாளிலேயே இந்தியா பிரகாசமான ஆரம்பத்தை தொடங்கி உள்ளது என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News