வழிபாடு
திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழா தொடங்கியது

திருப்பரங்குன்றம் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழா தொடங்கியது

Published On 2021-12-22 05:57 GMT   |   Update On 2021-12-22 05:57 GMT
திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்களுக்கு அபிஷேக எண்ணெய் மூலிகை தைலம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல 25-ந்தேதி வரை இரவில் அம்பாள் புறப்பாடும், அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகின்ற 25-ந்தேதி வரை நடக்கிறது. திருவிழாவையொட்டி ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானை மட்டும் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு தெய்வானை அருள்பாலித்தார்.

இந்த நிலையில் பக்தர்களுக்கு அபிஷேக எண்ணெய் மூலிகை தைலம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல 25-ந்தேதி வரை இரவில் அம்பாள் புறப்பாடும், அம்பாளுக்கு சிறப்பு பூஜையும் நடக்கிறது.
Tags:    

Similar News