செய்திகள்
மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இலவச மருத்துவ முகாம்- 5 நாட்கள் நடக்கிறது
மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.
உயரம் மற்றும் எடை பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, வெப்ப நிலை, துடிப்பு மற்றும் ஆலோசனை போன்றவை இதில் வழங்கப்படுகிறது.
இந்த மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.
20-ந் தேதி விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், 22-ந் தேதி தியாகராய கல்லூரி, கிண்டி மெட்ரோ ரெயில் நிலையங்கள், 24-ந் தேதி ஐகோர்ட்டு, செனாய் நகர் ரெயில் நிலையங்கள், 27-ந் தேதி புதுவண்ணாரப்பேட்டை, வடபழனி ரெயில் நிலையங்கள், 29-ந் தேதி அரசினர் தோட்டம், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடக்கிறது.
இந்த மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச மருத்துவ முகாமை நடத்துகிறது.
உயரம் மற்றும் எடை பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, வெப்ப நிலை, துடிப்பு மற்றும் ஆலோசனை போன்றவை இதில் வழங்கப்படுகிறது.
இந்த மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.
20-ந் தேதி விம்கோநகர் மெட்ரோ ரெயில் நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், 22-ந் தேதி தியாகராய கல்லூரி, கிண்டி மெட்ரோ ரெயில் நிலையங்கள், 24-ந் தேதி ஐகோர்ட்டு, செனாய் நகர் ரெயில் நிலையங்கள், 27-ந் தேதி புதுவண்ணாரப்பேட்டை, வடபழனி ரெயில் நிலையங்கள், 29-ந் தேதி அரசினர் தோட்டம், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடக்கிறது.
இந்த மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.