செய்திகள்
ஏர்வாடி அருகே என்ஜினீயர் வீட்டில் சி.சி.டி.வி. கேமிராக்கள் திருட்டு
ஏர்வாடி அருகே என்ஜினீயர் வீட்டில் சி.சி.டி.வி. கேமிராக்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள பிளசண்ட் நகர் 2-வது மெயின் தெருவை சேர்ந்தவர் கலைசெழியன். இவரது மனைவி சோனியா (வயது 33). கலைசெழியன் கத்தார் நாட்டில் பொறியாளராக உள்ளார். இதனால் சோனியா தனது 2 மகள்களுடன் வசித்து வருகின்றார். சம்பவத்தன்று பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தில் தனது உறவினர் இறந்து விட்டதால் சோனியா, மகள்களுடன் வீட்டை பூட்டி விட்டு, அங்கு சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்கள் மற்றும் மானிட்டர் உள்ளிட்டவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இதுகுறித்து சோனியா ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.