ஆட்டோ டிப்ஸ்
பஜாஜ் ஆட்டோ

ரூ. 300 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பஜாஜ்

Published On 2021-12-30 08:57 GMT   |   Update On 2021-12-30 08:57 GMT
பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் பூனேவில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை கட்டமைக்க இருக்கிறது.


பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் ரூ. 300 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை பூனேவின் அகுர்டி பகுதியில் கட்டமைக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. 

இந்த ஆலையில் அதிநவீன ரோபோடிக் மற்றும் தானியங்கி உற்பத்தி முறைகள் நிறுவப்பட இருக்கின்றன. இங்கு நடைபெறும் பெரும்பாலான பணிகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்பட இருக்கின்றன. இந்த ஆலை 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இந்த ஆலையில் மொத்தம் 800 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.



புதிய ஆலையில் இருந்து முதல் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. தற்போதைய முதலீடு மட்டுமின்றி மேலும் சில விற்பனையார்கள் இணைந்து ரூ. 250 கோடி முதலீடு செய்ய இருக்கின்றனர்.
Tags:    

Similar News