செய்திகள்

கடல் சீற்றம் - நாகை மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Published On 2018-11-05 05:03 GMT   |   Update On 2018-11-05 05:03 GMT
நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம்:

வடகிழக்கு பருவ மழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. 1-ந் தேதி முதல் 4-ந் தேதி முதல் மழை பெய்தது.

நேற்று ஒரு சில இடங்களில் லேசாக மழை பெய்தது. நாகை. வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

இதற்கிடையே நாளை (6-ந் தேதி) முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 5-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மேலும் கரையோரங்களில் தங்களது விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதேபோல் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் உப்பள தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் மல்லிபட்டினம், சேதுபாவா சத்திரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று 5 -வது நாளாக கடலுக்கு செல்ல வில்லை.

Tags:    

Similar News