செய்திகள்
கைது

பாளையில் மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2021-09-22 11:11 GMT   |   Update On 2021-09-22 11:11 GMT
பாளையை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் மாடசாமி (வயது 19). இவருக்கும் பாளையை சேர்ந்த 17 வயது பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து சமூகநல அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அவர்கள் விசாரணை நடத்திய போது மாடசாமி, மைனர் பெண்ணை திருமணம் செய்தது உறுதியானது. இதுதொடர்பாக சமூகநல விரிவாக்க அலுவலர் பார்வதி, மல்லிகா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத் தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கைது செய்தனர். மைனர் பெண்ணை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
Tags:    

Similar News