ஆன்மிகம்
குருப்பெயர்ச்சியையொட்டி யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்
வேதநாத ஈஸ்வரன் கோவிலில் 9 அடி உயரத்தில் உள்ள குரு யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலை தாலுகா துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலத்தை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் வேதநாத ஈஸ்வரன் கோவிலில் 9 அடி உயரத்தில் குரு யோக தட்சிணாமூர்த்தி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். குருப்பெயர்ச்சியையொட்டி கோவிலில் சிறப்பு யாகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
குரு யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பரிகார பூஜைகளும் நடந்தது. விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
குரு யோக தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பரிகார பூஜைகளும் நடந்தது. விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.