செய்திகள்
தற்கொலை

கீழ்வேளூர் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2020-10-28 10:06 GMT   |   Update On 2020-10-28 10:06 GMT
கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ரமேஷ்(வயது30). இவருக்கு திருமணம் செய்ய பல இடங்களில் பெண் பார்த்து வந்தனர். ஆனால் வரன் அமையவில்லை. இதனால் தனக்கு திருமணம் ஆகவில்லை என விரக்தியால் சம்பவத்தன்று பூச்சிகொல்லி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News