செய்திகள்
அதிரடி காட்டிய சஞ்சய் யாதவ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் - 8 விக்கெட் வித்தியாசத்தில் சேலத்தை வீழ்த்தியது நெல்லை அணி

Published On 2021-08-05 17:55 GMT   |   Update On 2021-08-05 17:55 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் சேலத்துக்கு எதிரான போட்டியில் நெல்லை அணியின் பிரதோஷ் ரஞ்சன் பால், சஞ்சய் யாதவ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது.
சென்னை:

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விஜய் சங்கர் 41 ரன்கள் அடித்தார். அபிஷேக் 25 ரன்களும், லோகேஷ் ராஜ் 15 ரன்களும், கணேஷ் மூர்த்தி 10 ரன்களும் எடுத்தனர். 
நெல்லை அணி சார்பில் அதிசயராஜ், ஹரிஷ், கேப்டன் பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து, 121 ரன்கள் என்ற இலக்குடன் நெல்லை அணி களமிறங்கியது. துவக்க வீரர் சூர்யபிரகாஷ் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதன்பின், கேப்டன் பாபா அபராஜித், பிரதோஷ் ரஞ்சன் பால் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பாபா அபராஜித் 38 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சஞ்சய் யாதவ் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.

இறுதியில், நெல்லை அணி 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரதோஷ் ரஞ்சன் பால் 23 ரன்னும், சஞ்சய் யாதவ் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நெல்லை அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.
Tags:    

Similar News