ஆன்மிகம்
ரதசப்தமி: திருப்பதியில் 7 வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா
திருப்பதியில் இன்று ரதசப்தமியையொட்டி 7 வாகனங்களில் மாடவீதிகளில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். வாகன சேவையை தரிசிக்க மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தனர்.
திருப்பதி
திருப்பதியில் இன்று ரதசப்தமி விழா நடந்தது. இதையொட்டி 7 வாகனங்களில் மாடவீதிகளில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன சேவையை தரிசிக்க மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனமும், 11 மணிக்கு கருட சேவையும், 1 மணியளவில் அனுமந்த வாகனம், 2 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
மாலை 4 மணிக்கு கல்ப விருட்ச வாகனம், 6 மணிக்கு சர்வ பூபால வாகனம் மற்றும் இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் மாடவீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.
ரதசப்தமி விழாவையொட்டி தரிசனத்திற்கு வழக்கமாக வரும் பக்தர்களை விட கூடுதலாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்திருந்தனர்.
டிக்கெட் இல்லாமல் வந்த பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படவில்லை.
திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருப்பதியில் இன்று ரதசப்தமி விழா நடந்தது. இதையொட்டி 7 வாகனங்களில் மாடவீதிகளில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கடேச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வாகன சேவையை தரிசிக்க மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தனர். அவர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணதிர கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனமும், 11 மணிக்கு கருட சேவையும், 1 மணியளவில் அனுமந்த வாகனம், 2 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.
மாலை 4 மணிக்கு கல்ப விருட்ச வாகனம், 6 மணிக்கு சர்வ பூபால வாகனம் மற்றும் இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்தில் மாடவீதிகளில் சாமி வீதி உலா நடக்கிறது.
ரதசப்தமி விழாவையொட்டி தரிசனத்திற்கு வழக்கமாக வரும் பக்தர்களை விட கூடுதலாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்திருந்தனர்.
டிக்கெட் இல்லாமல் வந்த பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படவில்லை.
திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் மற்றும் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.