செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது- புதுச்சேரி முதலமைச்சர்

Published On 2020-12-12 08:05 GMT   |   Update On 2020-12-12 08:05 GMT
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.
சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேரில் சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஸ்டாலினுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை கவர்னர் கிரண்பேடி செய்து வருகிறார்.

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி இடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. சட்டமன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ்-திமுக தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் ”

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News