உள்ளூர் செய்திகள்
கோப்பு புகைப்படம்

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜன. 19-ம் தேதி திருப்புதல் தேர்வு

Published On 2022-01-11 16:16 GMT   |   Update On 2022-01-11 16:16 GMT
கொரோனா எண்ணிக்கை அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், திருப்புதல் தேர்வு மதிப்பெண்ணை மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் ஜனவரி 19-ம் தேதி திட்டமிட்டபடி 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் ஜனவரி 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையும் நடைபெறும் என கடந்த டிசம்பர் மாதம் தேர்வுத்துறை அறிவித்தது.



இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் திருப்புதல் தேர்வு ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி 10 மற்றும் 12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால்,  திருப்புதல் தேர்வு மதிப்பெண்களை மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News