ஆன்மிகம்
முளகுமூடு தூய மரியன்னை ஆலய பசிலிக்கா அறிவிப்பு பெருவிழா தள்ளிவைப்பு
தற்போது கொரோனா அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் முளகுமூடு தூய மரியன்னை ஆலய பசிலிக்கா அறிவிப்பு பெருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முளகுமூடு தூய மரியன்னை ஆலயம், திருத்தந்தை பிரான்சிசால் தமிழகத்தின் ஏழாவது பசிலிக்காவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு பெருவிழா 20-ந்தேதி மாலை 4 மணிக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. தற்போது கொரோனா அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் மேற்படி பெருவிழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேராயர் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளார்.