உள்ளூர் செய்திகள்
.

காவேரிப்பட்டணம் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை

Published On 2022-05-06 10:45 GMT   |   Update On 2022-05-06 10:45 GMT
காவேரிப்பட்டணம் அருகே வயிற்று வலியால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்
காவேரிப்பட்டணம் ,

காவேரிப்பட்டணம் அடு த்த மலையாண்ட அள்ளி செட்டிமாரம்பட்டியை சே ர்ந்தவர் மகேஸ்வரி. இவரது மகள் வேடியம்மாள் (வ யது16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
வேடியம்மாளுக்கு  கட ந்த மூன்று வருடமாக அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது.  

இதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.இதனால்  அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தனது துப்பட்டாவால் தூக்கு ப்போட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த குடு ம்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வேடியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

இது குறித்து காவேரி ப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News