செய்திகள்
எஸ்.பி., சேஷாங்சாய்

திருப்பூர் மாவட்ட புதிய எஸ்.பி., பொறுப்பேற்பு

Published On 2021-06-07 09:29 GMT   |   Update On 2021-06-07 15:20 GMT
திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக சேஷாங்சாய் இன்று பொறுப்பேற்றுகொண்டார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர்மாவட்ட எஸ்.பி.,யாக இருந்த திஷா மிட்டல், சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக மாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக திருப்பூருக்கு எஸ்.பி., அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில்  கரூர் மாவட்ட எஸ்.பி., சேஷாங் சாய், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று காலை  திருப்பூர்எஸ்.பி.,யாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 
Tags:    

Similar News