செய்திகள்
தருவை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
தருவை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தருவை முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 54) விவசாயி. இவர் சம்பவத்தன்று தருவை அருகே உள்ள பச்சையாறு பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முருகனை உடனே பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.