செய்திகள்

உ.பி.யில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல் மந்திரி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

Published On 2018-09-06 11:44 GMT   |   Update On 2018-09-06 11:44 GMT
உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். #UPHeavyRain #YogiAdityanath
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கடந்த ஒரு வாரமாக பெய்து வரும்  கனமழையில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளனர்.

கான்பூரில் உள்ள கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அபாய அளவை தாண்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.  இதையடுத்து, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டரில் சென்று இன்று பார்வையிட்டார்.

பஸ்தி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளில் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #UPHeavyRain #YogiAdityanath
Tags:    

Similar News