செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 2 மாணவர்கள் - ஆசிரியருக்கு கொரோனா

Published On 2021-09-16 09:40 GMT   |   Update On 2021-09-16 09:40 GMT
திருப்பூர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொங்கல்நகரத்தில் அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 9 மற்றும 10-ம்வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.  

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் திருப்பூர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. 

இதையடுத்து பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 21 மாணவர்கள் மற்றும் 6ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News