செய்திகள்
கைது

விருதுநகரில் பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

Published On 2021-09-05 09:49 GMT   |   Update On 2021-09-05 09:49 GMT
விருதுநகரில் பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் ஓ.நடுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இவர் பால் வாங்குவதற்காக பக்கத்து வீட்டுக்கு செல்வார். அப்போது அங்கு உள்ள குருசாமி (36) என்பவருக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News