ஆன்மிகம்
மாதேஸ்வரன் மலைக்கோவில்

மாதேஸ்வரன் மலைக்கோவில் 3 நாட்களுக்கு மூடல்- தரிசனம் ரத்து

Published On 2020-12-09 08:55 GMT   |   Update On 2020-12-09 08:55 GMT
மாதேஸ்வரன் மலைக்கோவில் நிர்வாகிகள் வெளியிட்ட அறிவிப்பில் 3 நாட்களுக்கு பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு வர வேண்டாம் என்றும், தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக, கர்நாடக எல்லையில் மேட்டூர் அருகே பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கர்நாடகா மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கார்த்திகை தீபம் நிறைவு நாளன்று தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசிக்க செல்வார்கள். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 3 நாட்களுக்கு மாதேஸ்வரன் கோவில் மூடப்படுகிறது.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் வெளியிட்ட அறிவிப்பில் 3 நாட்களுக்கு பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு வர வேண்டாம் என்றும், தரிசனத்திற்கு அனுமதிக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News