செய்திகள்
விபத்து பலி

சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2020-12-02 11:15 GMT   |   Update On 2020-12-02 11:15 GMT
சாக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:

சாக்கோட்டை அருகே உள்ள வீரசேகரபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 70). இவர் அழகாபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கருப்பையா திருமண மண்டபத்தில் இருந்த குப்பைகளை வெளியே சென்று கொட்டிவிட்டு மீண்டும் மண்டபத்திற்கு திரும்பினார். அதற்காக சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கருப்பையா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் கீழே விழுந்த கருப்பையாவின் தலையில் கல் குத்தியது. காதிலும் ரத்தம் வழிந்தது. சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News