செய்திகள்
கொரோனா வைரஸ்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலி

Published On 2021-07-31 09:43 GMT   |   Update On 2021-07-31 09:43 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளிவந்தது. இதில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 43,823 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே தொற்று பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே உள்ள கொங்கம்பட்டை சேர்ந்த 87 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 341 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News