செய்திகள்
மானு பாகெர்

துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு - இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

Published On 2021-07-27 01:09 GMT   |   Update On 2021-07-27 01:09 GMT
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் யஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா ஜோடி தோல்வி அடைந்தது.
டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு துப்பாக்கிச் சுடுதல் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இந்தியா சார்பில் மானு பாகெர், சவுரப் சவுத்ரி மற்றும் யஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில் மானு பாகெர் - சவுரப் சவுத்ரி ஜோடி அபாரமாக ஆடி 582 புள்ளிகள் பெற்றது. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு கலப்பு இரட்டையர் பிரிவில் யஷாஸ்வினி தேஸ்வால் - அபிஷேக் வர்மா ஜோடி தோல்வி அடைந்தது.
Tags:    

Similar News