உள்ளூர் செய்திகள்
கைது

வேடசந்தூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது

Published On 2022-04-16 09:43 GMT   |   Update On 2022-04-16 09:43 GMT
வேடசந்தூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது மொத்தமாக லாட்டரி விநியோகம் செய்த கரூரைச் சேர்ந்த வியாபாரியை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள கூம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் கொண்ட போலீசார் வெள்ளையகவுண்டனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது வெள்ளையகவுண்டனூர் பஸ் ஸ்டாப்பில் போலீசாரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடினார்.

உடன் போலீசார் தப்பி ஓடிய நபரை பிடித்து விசாரித்தபோது சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த முனியப்பன்(41) என்பவர் என்பது தெரிந்தது.

அரசால் தடைசெய்யப்பட்ட அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டை பொதுமக்களை ஏமாற்றி விற்றுக் கொண்டிருந்ததை தெரிந்தது.

இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்து அவரிடம் இருந்த ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள அசாம் மாநில லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவருக்கு லாட்டரி டிக்கெட் மொத்தமாக விநியோகம் செய்த கரூரைச் சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News