செய்திகள்
பணம் பறிப்பு

கும்பகோணத்தில் அடுத்தடுத்து 2 வியாபாரிகளை வழிமறித்து தாக்கி பணம் பறிப்பு

Published On 2020-03-18 11:43 GMT   |   Update On 2020-03-18 11:43 GMT
கும்பகோணத்தில் ஒரேநாளில் 2 வியாபாரிகளை தாக்கி பணம் பறித்த மர்மகும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம்:

கும்பகோணம் மேலக்காவேரி வைக்கல் கட்டுக்காரத் தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். மீன் வியாபாரி. இன்று காலை மேலக்காவேரி பெரும் மாண்டி இடுகாடு வழியாக மீன் வியாபாரத்திற்காக அவர் சென்றபோது முகமூடி அணிந்த சில நபர்கள் வழிமறித்துள்ளனர்.

அப்போது ஆறுமுகத்தை கம்பியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.5,330 பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதேபோல் மேலக்காவேரி விளாங்குடி செட்டி குளம் பகுதியை சேர்ந்த கறி வியாபாரி அஸ்ரப்அலி என்பவர் ஆழ்வான் கோவில் தெரு பகுதியில் சென்றபோது முகமூடி அணிந்த மர்ம கும்பல் உருட்டு கம்பியால் அவரை தாக்கி ரூ.6,750 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசில் அசரப்அலி மற்றும் ஆறுமுகம் தனித்தனியே புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News