உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

பைக் விபத்தில் தொழிலாளி பலி

Published On 2022-01-12 09:17 GMT   |   Update On 2022-01-12 09:17 GMT
ஆற்காடு அருகே பைக் விபத்தில் தொழிலாளி பலியானர்.
ஆற்காடு:

ஆற்காடு அடுத்த கலவை வேண்டி பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது45). கூலி தொழிலாளி. இவர் வேலை சம்பந்தமாக கலவை சென்றுவிட்டு மீண்டும் வேண்டிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

வேண்டி அருகே வரும்போது வெங்கடேசன் என்பவர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குமார் ஓட்டி வந்த பைக் வெங்கடேசன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் குமாருக்கு பின்பக்க தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த  கலவை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமார் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்த வெங்கடேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News