செய்திகள்
கோப்புபடம்

கொடைக்கானலில் கார்ஷெட் அமைக்கும்போது தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் பலி

Published On 2021-06-06 13:08 GMT   |   Update On 2021-06-06 13:08 GMT
கொடைக்கானலில் கார்ஷெட் அமைக்கும்போது தவறி விழுந்த பட்டதாரி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:

கொடைக்கானல் எம்.எம். தெருவை சேர்ந்தவர் சாலமன் (வயது 26). பட்டதாரி. இவர், கொடைக்கானல் நகர் வத்தலக்குண்டு சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு சொந்தமான குடியிருப்பு பகுதியில் கார்ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, 10 அடி உயரத்தில் இருந்து தவறி அவர் கீழே விழுந்தார். 

இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாலமனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News