செய்திகள்
கோப்புப்படம்

மகாராஷ்டிரா மாநில கொரோனா தினசரி பாதிப்பு: மார்ச் 10-க்குப் பிறகு இன்று குறைந்த பதிவு

Published On 2021-06-06 17:27 GMT   |   Update On 2021-06-06 17:27 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 13,659 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 12,557 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 12,577 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 233 பேர் உயிரிழந்துள்ளனர். 14,433 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதிக்குப்பின் கொரோனா தினசரி பாதிப்பு குறைவு இன்றைய 12,577 ஆகும்.

நேற்று 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று 233 ஆக பதிவு செய்துள்ளது. இதில் 167 பேர் கடந்த 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள். 66 பேர் கடந்த வாரங்களில் உயிரழந்தவர்கள். உயிரிழப்பு 1.72 சதவீதமாக இருக்கும் நிலையில், குணமடைந்தவர்களின் சராசரி 95.05 ஆகும். 1,85,527 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News