செய்திகள்
ரவி சாஸ்திரியுடன் விராட் கோலி

பெங்களூருவில் இந்திய அணி வீரர்களுடன் ராகுல் டிராவிட் சந்திப்பு

Published On 2019-09-20 10:11 GMT   |   Update On 2019-09-20 10:11 GMT
பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணி வீரர்களுடன், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் உரையாற்றினார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தலைவராக உள்ளார். இவர் திடீரென்று இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த மைதானத்திற்குச் சென்றார்.

அங்கு தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் உரையாடினார். பின்னர் ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஷ்ரேயாஸ் அய்யர், கலீல் அகமது, மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், குருணால் பாண்டியா ஆகியோர் ராகுல் டிராவிட்டின் கீழ் இந்திய ஏ அணியில் விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News