செய்திகள்
விபத்து பலி

சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலி

Published On 2021-09-29 14:55 GMT   |   Update On 2021-09-29 14:55 GMT
சூளகிரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி லாரி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சிவமணிவேல் (வயது 38). லாரி டிரைவர். சம்பவத்தன்று லாரியில் வந்த அவர், ஓசூர் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிள், சிவமணிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிவமணிவேலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சூளகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிவமணிவேல் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News