செய்திகள்
திமுக எம்பி கவுதம் சிகாமணி

திமுக எம்.பி. கவுதம் சிகாமணியின் ரூ.8.6 கோடி சொத்துகள் முடக்கம்

Published On 2020-10-16 12:42 GMT   |   Update On 2020-10-16 18:07 GMT
ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாக அவருடைய 8.6 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
திமுக-வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி. இவரது மகன் கவுதம் சிகாமணி. இவர் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு திமுக எம்.பி.யாக உள்ளார்.

இவரது ரூ.8.6 கோடியிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக வெளிநாட்டில் சொத்துக்கள் வாங்கியதாகவும், அந்நிய செலவாணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, அதனடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
Tags:    

Similar News