செய்திகள்
கோப்புபடம்

வடமதுரை அருகே குளத்தில் மண் அள்ளிய வாலிபர் கைது

Published On 2020-12-31 11:08 GMT   |   Update On 2020-12-31 11:08 GMT
வடமதுரை அருகே குளத்தில் மண் அள்ளிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள மோளப்பாடியூர் பகுதியில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். 

அப்போது அங்குள்ள எட்டிக்குளத்தில் வாலிபர் ஒருவர் மண் அள்ளி கொண்டு இருந்தார். அவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் மோளப்பாடியூரை சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 25) என்பதும், அவர் அனுமதியின்றி மண் அள்ளுவதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News