செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்து வேண்டுதல்களை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
கோயில் முன்பாக பொதுமக்கள் மாவிளக்கு போட்டு விளக்குகள் ஏற்றியும், தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதுபோன்று காமராஜபுரம் தொகுதியிலிருந்து யானை ஊர்வலத்துடன் செண்டை மேளம் முழங்க பூத் தட்டுகள் எடுத்துச் செல்லப்பட்டன
இதேபோன்று நகரின் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூத்தட்டுகளை கொண்டு வந்து அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.